மதுபான சாலைகளை திறந்தமைக்கு வைத்திய நிபுணர்கள் தமது கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
மதுபான சாலைகளை திறப்பதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் முன்னேற்ற நடவடிக்கைகளை கடுமையாக பாதிக்கும் என சிறீலங்கா வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பத்மா எஸ் குணரத்ன தெரிவித்துள்ளார்.