மன்னார் – மதவாச்சி பிரதான வீதி இசை மாலை தாழ்வுப்பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மன்னார் நோக்கி சென்று கொண்டிருந்த பட்டா ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் நின்ற மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சாரதிக்கு அருகில் இருந்து பயணித்தவரே உயிரிழந்துள்ளார். வாகனத்தை செலுத்தி சென்ற சாரதிக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லையெனவும், அவர் மயக்க நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலம் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் விபத்து குறித்து முருங்கன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
0
87
- Tags
- #Mannar
Previous article
Next article