30 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மன்னாரைத் தொடர்ந்து வடக்கில் மற்றுமொரு மாவட்டத்தில் பொது இடங்களில் நடமாட தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படவுள்ளது!

முல்லைத்தீவு மாவட்டத்தில், இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களே சுகாதார விதிமுறைக்கு அமைவாக வீதிகளில் நடமாட முடியும் என, முல்லைத்தீவு மாவட்டப் பிராந்திய சுகாதார பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றியவர்கள் தடுப்பூசி செலுத்திய அட்டையை தம்வசம் வைத்திருக்க வேண்டும் எனவும் விரைவில் பரிசோதனை நடவடிக்கைக்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்படுவதுடன், தடுப்பூசி பெற்றவர்களே வீதிகளில் செல்ல அனுமதிக்கப்படும் நிலை முல்லைத்தீவு மாவட்டத்தில் எதிர்காலத்தில் நடைமுறைக்கு வருவதாற்கான சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles