கல்முனை கலாசார மத்திய நிலையம் ஏற்பாடு செய்த கலாசார விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் கலாசார மேம்பாட்டு உத்தியோகத்தர் றிஸ்வான் தலைமையில் நேற்று நடைபெற்றது.
கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி ; பிரதம அதிதியாக கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக சரோ பார்ம் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் தாஜுதீன், ஜாஹி வீவஸ் நிறுவனத்தில் முகாமைத்து பணிப்பாளர் உபைதுல் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதியாக நபீர் கலந்து கொண்டார்.
கல்முனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கலைஞர்களின் கலை, கலாச்சார நிகழ்வுகள் இங்கு அரங்கேற்றப்பட்டதுடன் கலாசார மத்திய நிலையத்தினால் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசில்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் பிரதேச இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், பிரதேச நலன் விரும்பிகள் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.