மருதமுனை பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்தியதிகாரி டாக்டர் ஏ.எல்.எம். மிஹ்லார் தலைமையிலான வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினருக்கும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்குமிடையிலான வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.
இதன்போது வைத்தியசாலையின் அபிவிருத்தி திட்டங்கள், வளத்தேவைகள், உட்பட இருக்கும் வளங்களை பயன்படுத்தி மக்களுக்கு உயர்ந்த சுகாதார சேவைகள் வழங்குவது தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் விரிவாக ஆராயப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் எம்.பி.அப்துல் வாஜித், கல்முனை பிராந்திய திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம். மாஹீர், வைத்தியசாலை அபிவிருத்தி குழு உபதலைவர்கள் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் நிர்வாக உறுப்பினர்கள உட்பட துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.