கண்டி மாவட்ட பணியாளர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி பெற்றுக்கொடுப்பது தொடர்ந்து தாமதிக்கப்பட்டு வருவதால், தபால்களினூடாக மருந்துகளை விநியோகிக்கும் பணியிலிருந்து தபால் ஊழியர்கள் விலகியுள்ளனர்.
கண்டி பொது அஞ்சல் அலுவலகம் உள்ளிட்ட ஏனைய தபால் நிலையங்களின் ஊழியர்களும் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளதாக அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் எச்.கே.கரியவாசம் தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்ட தபால் ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு கொவிட் 19 தடுப்பூசியை பெற்றுக்கொடுக்குமாறு தொடர்ச்சியாகக் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் அது தொடர்பில் கருத்திற்கொள்ளப்படாததன் காரணமாகவே தபால் நிலைய ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.