33 C
Colombo
Thursday, March 28, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மாணவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி
ஏற்றும் பணிகள் முன்னெடுப்பு

கொரோனா தொற்றில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான இரண்டாவது பைஸர் தடுப்பூசி ஏற்றும் பணிகள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய பட்டிருப்பு கல்விவலயத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்தில் கல்விகற்கும் 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு நேற்று இரண்டாம்
கட்டதடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கான தடுப்பூசிகளை ஏற்றினர்

களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.இராஜேந்திரன் வழிகாட்டலில் மேற்பாiர்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரன் ஒழுங்கமைப்பில் பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles