முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கிணங்க, றகமா நிறுவனத்தினரால் மாந்தை கிழக்கு பிதேசத்திற்குட்பட்ட ஒட்டறுத்தகுளம், வண்டிகட்டு குளம், பாலப்பாணி குளம், கிடாப்பிடித்த குளம் ஆகிய குளங்களில் நன்னீர் வளர்ப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தினை மந்தை கிழக்கு பிரதேச செயலாளர் மற்றும் றகமா நிறுவனத்தின் செயலாளர் நாயகம் இணைந்து நேற்று ஆரம்பித்து வைத்தனர். இச்செயற்றிட்டத்திற்காக குறித்த குளங்களில் 60 ஆயிரம் மீன் குஞ்சுக்கள் விடப்பட்டுள்ளன. உணவு உற்பத்தியினை அதிகரிக்கும் செயற்திட்டத்தின் கீழ், தேவைப்பாடுடைய 4 கிராமங்களில், நன்னீர் மீன்பிடி தொழிலை மேற்கொள்ளும் குடும்பங்களுக்கு நிலையான வருமானத்தினை பெற்றுக்கொடுப்பதற்காகவும், பிரதேச மக்களிற்கான போசக்கான உணவினை பெற்றுக்கொடுப்பதற்காகவுமே இச் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக, றகமா நிறுவனம் தெரிவித்துள்ளது.