மாமனாரின் கையை வெட்டித் துண்டாக்கிய மருமகன் நஞ்சருந்திய நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று மாலை நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காணித் தகராறு காரணமாக மாமனாருடன் முரண்பட்ட மருமகன் மாமனாரின் கையை மணிக்கட்டுக்கும், முழங்கைக்கும் இடையில் வெட்டியுள்ளார்.
அதனால் கை துண்டாடப்பட்டுள்ளது. துண்டாடப்பட்ட கையை அருகில் இருந்த வாய்க்காலுக்குள் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ற அவர் நஞ்சருந்தியுள்ளார்.
மாமனாரும் மருமகனும கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.