25 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மாலை வேளையில் மழைவீழ்ச்சி – மக்களே! அவதானம்; வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கையில் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (07.11.20202) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அத்துடன் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் இன்று காலை மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும்போது மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் குறைத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என்றும் அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles