மாவனெல்ல, ஹிகுல பிரதேசத்தில் வசிக்கும் இருபது வயதுடைய இளைஞனைத் தேடும் பணியில் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
குறித்த இளைஞன் காணாமல்போயுள்ளதாக அவரது தாயார் மாவனெல்லை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொது மக்களிடம் பொலிஸார் உதவிகோரியுள்ளனர். மாவனெல்ல, ஹிகுல பிரதேசத்தினை சேர்ந்த ஆராச்சியின் விதுஷிகா நவஞ்சன பண்டார என்ற 20வயது இளைஞனே இவ்வாறு காணாமல்போயுள்ளார். குறித்த இளைஞன் கடந்த ஜூன் மாதம் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்குத் தோற்றிய பின்னர் புத்தளம் ஆனமடுவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் துறவற வாழ்விற்கு சென்றுள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம், தனது பெற்றோரைப் பார்ப்பதற்காக வீடு திரும்பிய அவர், கோவிலுக்குச் சென்றிருந்த நிலையில், காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடைசியாக குறித்த இளைஞன் தனது சகோதரியுடன் தொடர்பு கொண்டு தான் கேகாலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர் இளைஞன் தொடர்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே காணாமல்போன இளைஞன் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாவனெல்ல 071 – 8591418, மாவனல்லை பொலிஸ் நிலையம் 035 2247222 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.