நாட்டில் தற்போது ஏற்பட்டு இருக்கும் நெருக்கடி நிலைமையில் மின்சார சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது மிகவும் அவசியமானது என்று முன்னாள் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (09) உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இன்று நாட்டில் 85 சதவீத மின்சாரத்தை பெற்றுக்கொடுத்துள்ளோம்.
மின்சார உற்பத்தி நிலையங்களுக்கூடாக மின்சாரத்தை பெற்றுக்கொடுப்பதற்காக பாரியளவிலான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.