33 C
Colombo
Friday, April 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மின்னல் தாக்கி கணவனும் மனைவியும் பலி; திருக்கோவிலில் பரிதாபம்

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பாரிய இடி மின்னலில் திருக்கோவில் பிரதேச வினாயகபுரத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் பலியாகியுள்ளனர்.

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6மணியளவில் இடம்பெற்றது.

வினாயகபுரம் தபாலக வீதியைச்சேர்ந்த 46வயதுடைய லோகநாயகம் யோகேஸ்வரன் மற்றும் அவரது மனைவி காசிப்பிள்ளை ஜெயசுதா(வயது46) ஆகிய தம்பதிகளே இவ்விதம் மின்னல்தாக்கி பரிதாபகரமாக பலியானவர்களாவார். இவர்கள் விவசாயிகளாவர்.

இவர்களுக்கு மூன்று பிள்ளைகளுண்டு. சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்ப்டுள்ளது. திருக்கோவில் பிரதேச சபைத் தவிசாளர் வி.ஈ.கமலராஜன் ஸ்தலத்திற்கு விரைந்து பிரேத நடவடிக்கைகளை மேற்கொணடார்.

குறித்த தம்பதியினர் சாகாமம் கப்பித்தலாவ பகுதியிலுள்ள தமது காணியில் நலக்கடலை(கச்சான்) செய்கையிலீடுபட்டுக்கொண்டிருந்தபோது பாரிய இடி மின்னல் ஏற்பட்டது. அதற்குப்பயந்து ஓடிவருகையில் மின்னல் தாக்கி ஸ்தலத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. திருக்கோவில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles