அமிர்தகழி கிராம சேவையாளர் பிரிவில் நிர்மாணிக்கப்படவுள்ள முதியோர் பகல் நேர பராமரிப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு முதியோர் சங்க தலைவர் தலைமையில் இன்று இடம்பெற்றது.
முதியோர் தேசிய செயலகத்தின் 3.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அமிர்தகழி கிராம சேவையாளர் பிரிவில் முதியோர் பகல் நேர பராமரிப்பு நிலையமுதியோர் பகல் நேர பராமரிப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு முதியோர் சங்க தலைவர் மயில்வாகனம் அரசரெத்தினம் தலைமையில் இன்று இடம்பெற்றது.
முதல்கட்டமாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட 1.5 மில்லியன் ரூபா நிதியில் முன்னெடுக்கப்பட்டுள் வேலைத்திட்டத்தின் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது
இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம் ஆர்.சியாவுல் ஹக்,பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எ.சுதர்சன் , சமூக சேவை உத்தியோகத்தர்களான பி.கலாதேவன் , பி.ராஜ்குமார் ,கிராம சேவை உத்தியோகத்தர் விமலா ஸ்ரீ ,மண்முனை வடக்கு பிரதேச செயலக முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர்களான நிலக்சி நிருஷன் ,தனுஜா கிரிசாந்தன், உட்பட அமிர்தகழி முதியோர் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டு கட்டடத்திற்கான அடிக்கல்லினை நாட்டினர்.