67 வயது வயோதிபப் பெண்ணை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான நபரை எதிர்வரும் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதி ஒன்றில் வசிக்கும் 67 வயதுடைய வயோதிபப் பெண்ணொருவர் கடந்த 07 ஆம் திகதி இரவு தன்னுடைய பேத்தியின் 38 வயதான கணவண் மதுபோதையில் தனக்கு பலவந்தமாக மதுபானம் அருந்த வைத்து துஸ்பிரயோகம் செய்ததாக முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.
முறைப்பாட்டை தொடர்ந்து குறித்த பெண் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைகளுக்கு உட்ப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த பெண்ணை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 38 வயதான நபரை முள்ளியவளை பொலிசார் கைது செய்தனர்.
இந்நிலையில் சந்தேக நபர் மாங்குளம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 24 ஆம் திகதி வரை குறித்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.