முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் மூன்றாம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணம் – குருநகர் சவக்காலையடி சந்தியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்கத்தின் தலைவர் வணக்கத்துக்குரிய வேலன் சுவாமிகள், யாழ். மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள், சமூகமட்ட அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.