மேல்மாகாணத்திலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதை கட்டுப்படுத்துவதற்கான திறமை அரசாங்கத்திடம் இல்லாததன் காரணமாக தற்போது ஏனைய மாகாணங்களை சேர்ந்த மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொரோனாவின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தவறியுள்ளது என ஐக்கியதேசிய கட்சி குற்றம்சாட்டியுள்ளது.