யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்களின் அவசர உதவிகளுக்கு, அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தொலைபேசி இலக்கங்களான 077 395 78 94, 021 211 71 17 அல்லது 117 எனும் இலக்கங்களுக்கு தொடர்பினை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவித்தலை யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா விடுத்துள்ளார்.