யாழ்ப்பாணத்தில், வீதியில், மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த முதியவர், திடீர் என தடுமாறி வீதியோரம் வீழ்ந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த முதியவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதன்போது, அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை, பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
சுதுமலை மற்றும் உரும்பிராயை வதிவிடமாகக் கொண்ட 63 வயதுடைய முதியவரே இவ்வாறே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் மற்றும் போதனா வைத்தியசாலையில், உறவினர் ஒருவரை பார்வையிட்ட பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
யாழ்ப்பாணம் சிவலிங்கப் புலியடியச் சந்தியில் பயணித்தபோது, அவர் திடீரென, வீதியில் மோட்டார் சைக்கிளில் சரிந்து வீதியோரத்தில் வீழ்ந்துள்ளார்.
அவலக் குரல் எழுப்பிய அவரை, அந்தப் பகுதியைச் சேர்ந்தோர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளனர்.
அவருக்கு உடனடியாக முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில், கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.