யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ். நல்லூர் ஆலயத்திற்கு முன்பக்கமாகவுள்ள பருத்தித்துறை வீதியும் செம்மணி வீதியும் இணைகின்ற முத்திரைச் சந்தியில் இன்று காலையில் இவ் விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.
வீதியில் தரித்து நின்றிருந்த காரை திடீரென திருப்ப முற்பட்ட போது, துவிச்சக்கர வண்டியில் வந்துகொண்டிருந்த பெண் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது துவிச்சக்கர வண்டியில் பயணித்த பெண் பலத்த காயமடைந்து இரத்தம் வழிந்தோடிய நிலையில் அந்த வீதியால் சென்றவர்களும் அப்பகுதியில் உள்ளவர்களுமாக இணைந்து காயமடைந்தவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.