31 C
Colombo
Saturday, April 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

யாழ். பருத்தித்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்ட 13 பேர், எச்சரிக்கப்பட்டு விடுதலை

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிசாரின் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 13 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர், எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை நகர் பகுதிகளில், பெண்களுடன் தொடர்ச்சியாக சேட்டைகளில் ஈடுபட்டு வருவதாக, பருத்தித்துறை பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், இன்று, திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட போது, 13 கைது செய்யப்பட்டனர்.
பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் பரியந்த சமரசிங்க தலமையிலான குழுவினர், 13 பேரையும் கைது செய்து, எச்சரித்து விடுதலை செய்தனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles