மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் தேசிய மட்ட சாதனைக்கு , வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் மன்றத்தின் தலைவரும் ஓய்வுநிலை கல்விப்பணிப்பாளருமான பவளகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் உட்பட வலயக்கல்வி அலுவலக கல்விசார் அதிகாரிகளுக்கு தேசிய மட்ட சாதனைக்கு , வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது
தேசிய சாதனைக்கு ,வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தின் தலைவரும் ஓய்வுநிலை கல்விப்பணிப்பாளருமான எம் .பவளகாந்தன் தலைமையிலான மன்ற உறுப்பினர்களினால் வலயக்கல்விப்பணிப்பார் சுஜாதா குலேந்திர குமார் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்
இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் , ஆசிரியர் ஆலோசகர்கள் , கோட்டக்கல்விப்பணிப்பாளர்கள் , கல்வி அபிவிருத்தி நிர்வாக பிரிவு அதிகாரிகள் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் .