யாழ்ப்பாண பல்கலைக்கழக, வலிகாமம் வலய கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த பொங்கல் நிகழ்வு, வலிகாமம் வலய கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் கஜலக்சன் தலைமையில் இடம்பெற்றது. இன்று காலை 9.00 மணியளவில், பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான, யாழ்ப்பாணம் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய முன்றலில், சம்பிரதாயபூர்வ பொங்கல் இடம்பெற்று, தொடர்ச்சியாக, பல்கலைக்கழக மாணவர்களால், பஜனை வழிபாடுகள் நடத்தப்பட்டு, விசேட பூஜைகள் இடம்பெற்றன.
ஆலய முன்றலில், கலாசார பாரம்பரிய விளையாட்டுகளை தொடர்ந்து, சிவபூமி மடத்தில், கலை நிகழ்வுகள் இடம்பெற்று, பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
பிரதம விருந்தினராக, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சிறி சற்குணராஜா பங்கேற்றதுடன், கௌரவ விருந்தினராக, சாதனைத்தமிழன் ஆறு திருமுருகன் பங்கேற்றார். சிறப்பு விருந்தினராக, ரில்கோ சிற்றி ஹோட்டல் உரிமையாளர் திலகராஜ் மற்றும் 98 வயதான, நகுலேஸ்வர ஆலய நகுலேஸ்வர குருக்களும் கலந்துகொண்டனர்.