வலி.வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் பயணித்த வாகனம் மற்றும் அவரது சாரதி மீது தலைக்கவசத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவம் இளவாலை வசந்தபுரம் பகுதியில் இன்று மாலை 6.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனினும் தாக்கியவரின் பெயர் விவரங்கள் முறைப்பாட்டில் தெரிவிக்கப்படவில்லை என பொலிஸார் கூறினர்.
இளவாலை சேந்தாங்குளம் பகுதியில் வெள்ளவாய்க்கால் அமைக்கும் பணியைப் பார்வையிட்டு விட்டு வீடு திரும்பும் போதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றது என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனத்தில் தவிசாளர் அமர்ந்திருந்த பக்கமே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தவிசாளருக்கும் அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்களுக்கும் இடையில் நேற்று முரண்பாடு ஏற்பட்டிருந்த நிலையில் இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.