31 C
Colombo
Saturday, April 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வாழைச்சேனை பிள்ளையார் சிலை உடைப்பு: சந்தேக நபர் கைது

மட்டக்களப்பு மாவட்ட வாழைச்சேனையில் ஸ்ரீ கைலாயப் பிள்ளையார் ஆலயத்தில் அமைக்கப்பட்ட வழிப்பிள்ளையார் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிசார் மேற் கொண்ட விசாரணையில் சந்தேக நபர் ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

உதவிப் பொலிஸ் அத்தியட்ச்சகர் ஜி.எஸ்.ஜெயசுந்தரவின் ஆலோசனையின் பேரில் அரச புலனாய்வு உத்தியோகஸ்த்தர்கள் மேற்கொண்ட விசாரணையின்போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் ஆலயம் அமைந்துள்ள பிரதேசத்திலே வசித்து வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

நீண்ட காலமாகியும் தனக்கு அரச உத்தியோகம் கிடைக்கவில்லையென்றும் திருமண விடயமும் சரிவராத காரணத்தினால் வழிப்பிள்ளையாரை கட்டிப்பிடித்து மனவேதனையில் அழுததாகவும் அதனால் ஏற்பட்ட உராய்வு, மற்றும் அசைவு காரணமாக பிள்ளையாரின் உடற்பாகங்களில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தனது வாக்கு மூலத்தினை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்ட விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

70 வருட கால பழமை வாய்ந்த இரண்டரை அடி உயரமுள்ள குறித்த சிலையே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தடையவியல் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles