25 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

அம்பாறை மாவட்ட கல்முனை பெரியநீலாவணைக் கிராமத்தில் சௌபாக்கியா வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதியின் சௌபாக்கியா விசேட வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு பிரதேச செயலகத்திற்கு ஒரு வீடு எனும் திட்டத்தில் அம்பாறை மாவட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரியநீலாவணைக் கிராமத்தில் சமூர்த்திப்பயனாளி ஒருவருக்கு 10 இலட்சம் ரூபா செலவில் அமையவுள்ள வீட்டிற்கான அடிக்கல் வைக்கும் நிகழ்வு பிரதேச சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் இ.சந்திரகுமார் தலைமையில் இன்று நடைபெற்றது.

பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் வழிகாட்டலில் சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற நிகழ்வில் கிரமசேவகர், சமுக அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி வலய உதவியாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பயனாளியின் பங்களிப்புடன் 10 இலட்சம் செலவில் இவ் வீடு நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles