வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் இராணுவத்தினரால் வறிய குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
51வது இராணுவ படைப்பிரிவின் ஏற்பாட்டில் 1500 பேருக்கு உலருணவு பொதிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக இன்று காலை 10 மணியளவில் ஆரியகுளம் நாக விகாரையில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் 100 பேருக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இதனை 51வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் நாக விகாராதிபதி உட்பட இராணுவ அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.