பிங்கிரிய – விலத்தவ பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களுடனான பாரவூர்தி தொடர்பான மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, அந்த பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு விலத்தவ பகுதியில் வீதித்தடை கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான பாரவூர்தி ஒன்றை சோதனையிட்டுள்ளனர். இதன்போது பாரவூர்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை மீட்ட பொலிஸார், இருவரைக் கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.