26 C
Colombo
Thursday, March 28, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய தடை- பிரதமர் ரிஷி சுனக் அதிரடி..!

பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் கற்கும் சர்வதேச மாணவர்கள், தங்களது குடும்பத்தினரை பிரித்தானியாவிற்கு அழைத்து வருவதற்கு  தடை விதிக்கப்படவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 2024 முதல் முதுமானி(Ph.D) நிலைக்கு கீழே உள்ள பல்கலைக்கழகங்களில் கற்பவர்கள், தங்களது குடும்ப உறுப்பினர்களையோ அல்லது உறவினர்களோ, பிரித்தானியாவிற்கு அழைப்பதில் தடை விதிக்கப்படும் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை பற்றி, தரவுகளை அரசாங்கம் வெளியிட்டுள்ள  நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக  பிரதமரின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்,”இந்த மாற்றத்தின்  மூலம், இனி இடம்பெயர்வு தொடர்பாக கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும்.” என தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் 16000 ஆக இருந்த குடும்ப உறுப்பினர் விசாக்களின் எண்ணிக்கை, இந்த 2022 இல் 136,000 ஆக கிட்டதட்ட எட்டு மடங்கு அதிகரித்துள்ளதென, அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

மேலும் மாணவர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கான பராமரிப்பு தேவைகள், மறு ஆய்வு செய்யப்படும் எனவும்  தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த மாற்றங்களின் மூலம் சர்வதேச மாணவர்கள் தங்களது கல்வி நடவடிக்கை முடிவதற்குள் மாணவர் விசா வழியிலிருந்து, வேலை செய்வதற்கான விசாவை பெறும் முறையினை அகற்றும் எனவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles