27.7 C
Colombo
Thursday, April 25, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வேண்டாம் ஏ.ரி.ஏ: காத்தான்குடியில் கையெழுத்துச் சேகரிப்பு

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை அரசாங்கம் முற்றாக கைவிட வேண்டுமெனக் கோரி கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை இன்று மட்டக்களப்பு காத்தான்குடியிலுள்ள ஜும்ஆப்பள்ளிவாயல்களில் இடம்பெற்றது.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
அரசாங்கம் முன் வைத்துள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை முற்றாக கையிட வேண்டுமென வலியுறுத்தி காத்தான்குடியிலுள்ள ஜும்ஆப்பள்ளிவாயல்களுக்குஜும்ஆத் தொழுகைக்காக வந்தோர் தமது கையொப்பங்களை இட்டனர்.
உத்தேச பயங்கரவா எதிர்ப்புச் சட்டமானது தமிழ் முஸ்லிம்களுக்கு மாத்திரமின்றி பெரும்பான்மை சமூகத்தினை சேர்ந்த மக்களுக்கும் பாதிப்பான
ஒரு சட்டமாகும்.
இந்த சட்டத்தை அரசாங்கம் முற்றாக கைவிட வேண்டுமென வலியுறுத்தி கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டு ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் அனுப்பவுள்ளதாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர் ரஊப் ஏ மஜீத் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles