போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளை தொடர்ந்தும் விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்புடையோர் எனும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. குறித்த அதிகாரிகளை செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.