27.6 C
Colombo
Wednesday, December 6, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

‘13’ நீக்கப்படமாட்டாது அது பலப்படுத்தப்படும் – அமைச்சர் மஹிந்தானந்த

“13ஆவது திருத்தச் சட்டம் ஒருபோதுமே நீக்கப்படாது.அது மேலும் பலப்படுத்தப்படும். இதற்கான நடவடிக்கைகளில் கோட்டாபய அரசு இறங்கியுள்ளது. இது தொடர்பில் இந்தியாவுடனும் பேசவுள்ளோம்.”இப்படிக் கூறியிருக்கின்றார் யாழ்ப்பாணம் வருகை
தந்த விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே.


டான் தொலைக்காட்சிக்கு வழங்கிய விசேட
செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்திய அரசாங்கம் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை பயன்படுத்துமே
தவிர அதில் மாற்றத்தைக் கொண்டுவர முயலாது என விவசாய அமைச்சர்
மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்- எமது அரசில் 150க்கும் மேற்பட்ட
பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அவர்கள்
ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட தமது கருத்துக்களைத் தெரிவித்து
வருகின்றனர்.

நாட்டின் பிரதமரோ அல்லது நாட்டின் ஜனாதிபதியோ 13ஆவது
திருத்த சட்டத்தை நீக்குவோம் என்ற கருத்தை இதுவரை வெளியிடவில்லை.
அத்தோடு எமது அரசின் பேச்சாளரும் 13 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவோம்
என்று இதுவரை கருத்து கூறவில்லை.

இந்த 13ஆவது திருத்தச் சட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்துக்கு
நாம் நகரவேண்டும்.

தற்போது இந்தியாவுடனும்பேசி 13ஆவது திருத்தச் சட்டத்தைப்
பலப்படுத்தி அதனை நடைமுறைப்படுத்துவதற்குரிய
வேலைத்திட்டத்தை இந்த அரசு முன்னெடுக்கும்-என்றார்.

Related Articles

புத்தசாசனம், தொல்பொருள் திணைக்கள செயற்பாடுகளே நல்லிணக்கத்துக்கு பாதிப்பு

நாட்டில் யுத்தம் நிறைவு பெற்று 15 வருடங்களாகியும் நல்லிணக்கம் ஏற்படாமல் இருப்பதற்கு காரணம் புத்தசாசன அமைச்சும் தொல்பொருள் திணைக்களமும் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளாகும். அதனால் அவர்கள் தங்களின்...

பறங்கிய சமூகத்தின் கலை,கலாசார நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட பறங்கியர் சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் கலை,கலாசார நிகழ்வு பறங்கியர் சங்க தலைவர் டெரி ஸ்டோகஸ்தலைமையில் இன்று மட்டக்களப்பு சின்ன உப்போடை பறங்கியர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.சிறுவர்களினால் நிகழ்வுக்கு...

தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக் கடூழிச் சிறைத் தண்டனை

மூவரின் உயிரிழப்புக் காரணமான  தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக்  கடூழிச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு பஸ் ஒன்றை வேகமாகச் செலுத்தி...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

புத்தசாசனம், தொல்பொருள் திணைக்கள செயற்பாடுகளே நல்லிணக்கத்துக்கு பாதிப்பு

நாட்டில் யுத்தம் நிறைவு பெற்று 15 வருடங்களாகியும் நல்லிணக்கம் ஏற்படாமல் இருப்பதற்கு காரணம் புத்தசாசன அமைச்சும் தொல்பொருள் திணைக்களமும் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளாகும். அதனால் அவர்கள் தங்களின்...

பறங்கிய சமூகத்தின் கலை,கலாசார நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட பறங்கியர் சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் கலை,கலாசார நிகழ்வு பறங்கியர் சங்க தலைவர் டெரி ஸ்டோகஸ்தலைமையில் இன்று மட்டக்களப்பு சின்ன உப்போடை பறங்கியர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.சிறுவர்களினால் நிகழ்வுக்கு...

தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக் கடூழிச் சிறைத் தண்டனை

மூவரின் உயிரிழப்புக் காரணமான  தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக்  கடூழிச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு பஸ் ஒன்றை வேகமாகச் செலுத்தி...

நோயாளிகளின் வங்கிக் கணக்கில் திருடப்பட்ட பெருந்தொகைப் பணம்

புற்று நோயாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பணத்தை திருடி மோசடி செய்யும் சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கண்டுபிடித்துள்ளது. புற்று...

தெஹிவளை கட்டிடம் ஒன்றில் பொதி செய்யப்பட்ட கைக்குண்டு

தெஹிவளை பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் கைக்குண்டு ஒன்று, இன்றுகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இலக்கம் 124, அனகாரிக தர்மபால...