20ஆவது திருத்தச் சட்டத்தின் ஆபத்துக்களை அரசு புரிந்துகொள்ளத் தவறியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நீதி அமைச்சருமான ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:-
20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பின்னர் பதவி ஏற்றுக் கொள்ளும் ஜனாதிபதி உச்சபட்ச நலன்களைப் பெற்றுக்கொள்வார்.
19ஆவது திருத்தச் சட்டத்தின் குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
எனினும், 19ஆவது திருத்தச் சட்டம் நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருக்காவிட்டால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒருநாளும் இந்த நாட்டின் ஜனாதிபதியாகியிருக்க முடியாது-என்றார்.