32 C
Colombo
Thursday, March 30, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

20 ஆவது திருத்தச் சட்டம், என்னால் தயாரிக்கப்படவில்லை: நீதி அமைச்சர் அலி சப்ரி

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டம், தன்னால் தயாரிக்கப்படவில்லை என, நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தற்போது கொண்டுவரப்படவுள்ள 20 ஆவது திருத்தச் சட்டம், பெரும்பான்மை பலத்துடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என, நீதி அமைச்சர் அலி சப்ரி நம்பிக்கை வெளியிட்டார்.
கொழும்பில், நேற்று முன்தினம் (14) மாலை நிகழ்வொன்றில் பங்கேற்ற பின்னர், இவ்வாறு தகவல் வெளியிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது:
‘பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால், 9 பேர் கொண்ட குழு ஒன்று 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
நான் நினைக்கின்ற வகையில், திங்கட்கிழமை இந்தக் குழு கூடும்;.
குழுவின் அறிக்கை சமர்பிக்கப்படுவதற்கான இறுதித் திகதி குறிப்பிடப்படவில்லை.
மக்களின் கோரிக்கைகள், யோசனைகளுக்கு செவிகொடுத்து, அதனை செய்வதற்கு நாங்கள் பின்வாங்க மாட்டோம்.
20 ஆவது திருத்தச் சட்டத்தை நான் தயாரிக்கவில்லை.
19 ஆவது திருத்தம் நீக்கப்பட்டு, அதற்கு முன்னர் இருந்த திருத்தத்தைப் போல அமுல்படுத்துவதே அதில் இடம்பெறும்.
அமைச்சரவையின் ஆலோசனைப் பேரில், சட்டவாக்கப் பிரிவினால், பிரேரணையாக 20 ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின்படி, அமைச்சரவைதான் சட்டவாக்கம் செய்வதற்கான அதிகாரம் கொண்டிருக்கிறது.
திருத்தச் சட்டமூலம் இறுதிப்படுத்தப்படுவதற்கான பிரிவு, எனக்கு கீழ் உள்ள நீதியமைச்சில் இருப்பதால்தான், நான் தொடர்புபட்டுள்ளேன்.
எனது புதிய விடயங்கள், இந்த 20 ஆவது திருத்தத்தில் இல்லை.
இது 18 ஆவது திருத்தச் சட்டத்திற்கு சமமானதாகும்.
இந்த திருத்தச் சட்டமூலத்தை அங்கிகரிப்பதற்கான பெரும்பான்மை பலம், எமக்கு இருக்கிறது.
தற்போதும்கூட எமக்கு 150 உறுப்பினர்கள் உள்ளனர்.
இன்னும் 15 உறுப்பினர்கள் வெளியே இருந்து, அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கும், எமது கட்சியில் இணையவும் விருப்பம் வெளியிட்டிருக்கின்றனர்”
என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

ஒரு இலட்சம் அமெரிக்க டொலரில் வர்த்தககட்டடத்தை அமைக்கிறது நிந்தவூர் பிரதேச சபை

நிந்தவூர் பிரதேச சபை அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்குள் முதலிடம் பெற்றமையினால், பரிசுத் தொகையாக கிடைக்கப்பெற்ற ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் நிதியினைக் கொண்டு நிந்தவூர் பிரதேச சபைக்கு சொந்தமான...

தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு அர்ஜுன ரணதுங்கவுக்கு கடிதம்

தேசிய விளையாட்டு சபையின் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக  விலகுமாறு விளையாட்டுத்துறை அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகர் சுதத் சந்திரசேகரவினால் அர்ஜுன ரணதுங்கவுக்கு எழுத்துமூல அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த...

பொன்னியின் செல்வன் முதல் பாகமே நான் இன்னும் பார்க்கவில்லை – பார்த்திபன்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றதால்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

ஒரு இலட்சம் அமெரிக்க டொலரில் வர்த்தககட்டடத்தை அமைக்கிறது நிந்தவூர் பிரதேச சபை

நிந்தவூர் பிரதேச சபை அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்குள் முதலிடம் பெற்றமையினால், பரிசுத் தொகையாக கிடைக்கப்பெற்ற ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் நிதியினைக் கொண்டு நிந்தவூர் பிரதேச சபைக்கு சொந்தமான...

தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு அர்ஜுன ரணதுங்கவுக்கு கடிதம்

தேசிய விளையாட்டு சபையின் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக  விலகுமாறு விளையாட்டுத்துறை அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகர் சுதத் சந்திரசேகரவினால் அர்ஜுன ரணதுங்கவுக்கு எழுத்துமூல அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த...

பொன்னியின் செல்வன் முதல் பாகமே நான் இன்னும் பார்க்கவில்லை – பார்த்திபன்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றதால்...

விபசார விடுதி சுற்றிவளைப்பு இருவர் கைது

கல்கிஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள விபசார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டதில் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்...

சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளை இன்று சந்திக்கின்றது சர்வதேச மன்னிப்புச்சபை

இலங்கைக்கான சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி குறித்த விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக சர்வதேச மன்னிப்புச்சபையின் பிரதிநிதிகள் இன்று சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளனர். இலங்கைக்கு எந்த...