24 C
Colombo
Tuesday, March 19, 2024
12,987FansLike
19,993SubscribersSubscribe

’20’ ஐ விரைவில் நிறைவேற்றுவோம் – பங்காளிக் கட்சித் தலைவர்களிடம் ஜனாதிபதி

“அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை வைத்துக்கொண்டு என்னால் எதனையும் செய்ய முடியாது. உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பைக் கவனத்தில்கொண்டு கூடிய விரைவில் 20ஆவது திருத்தச் சட்ட வரைவை நிறைவேற்றிவிட வேண்டும். இந்தச் சட்ட வரைவை இழுத்தடிக்க நான் அனுமதி வழங்கமாட்டேன்” என திட்டவட்டமாகத் தெரிவித்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.

‘‘2021ஆம் ஆண்டு நவம்பர் எனது இரண்டாவது பதவியாண்டு நிறைவு தினத்துக்கு முன்னர் புதிய அரசமைப்பு கொண்டு வரப்படும்” என்றும் அவர் உறுதியளித்தார்.

20ஆவது திருத்தச் சட்ட வரைவு மற்றும் புதிய அரசமைப்புப் பணிகள் குறித்து ஆளுங்கட்சி உறுப்பினர்களைத் தெளிவுபடுத்துகின்ற சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதில் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் பங்காளிகளாகச் செயற்பட்டு வருகின்ற அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய, அராஜகத்தை எதிர்க்கின்ற மற்றும் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்கின்ற வகையிலான புதிய அரசமைப்புக்கான தேவையைத் தெளிவுபடுத்தினார். குறிப்பாக தற்சமயம் அமுலில் உள்ள 19ஆவது திருத்தச் சட்டத்தால் தனது கைகள் கட்டப்பட்டுள்ளன என்றும், அதனால் 20ஆவது திருத்தச் சட்ட வரைவை முடிந்தளவில் நிறைவேற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

தனது இரண்டாவது பதவியாண்டு நிறைவு திகதியான எதிர்வரும் 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு முன்னர் புதிய அரசமைப்பைச் சமர்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்தார்.

Related Articles

இளம் பெண் படுகொலை: சந்தேகநபர் கைது!

சீதுவ, முத்துவாடிய பகுதியில் வாடகை அறையொன்றில் இளம் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பலாங்கொடை வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.பலாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 22...

சிகை அலங்கரிப்பு நிலையத்தில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த கும்பல்!

சிகை அலங்கரிப்பு நிலையம் ஒன்றில் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் ஒன்று அநுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் சிறுவர் மற்றும்...

இளம் பிக்கு நீர்த்தேக்கத்தில் மூழ்கி உயிரிழப்பு!

ரஜரட்ட பிக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த ஹீல்ஒய சங்கானந்த என்ற இளம் பிக்கு தப்போவ நீர்த்தேக்கத்தில் மூழ்கி  உயிரிழந்துள்ளார். வனாத்தவில்லுவ ஸ்ரீ தர்மராஜா விகாரைக்கு விஜயம்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

இளம் பெண் படுகொலை: சந்தேகநபர் கைது!

சீதுவ, முத்துவாடிய பகுதியில் வாடகை அறையொன்றில் இளம் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பலாங்கொடை வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.பலாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 22...

சிகை அலங்கரிப்பு நிலையத்தில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த கும்பல்!

சிகை அலங்கரிப்பு நிலையம் ஒன்றில் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் ஒன்று அநுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் சிறுவர் மற்றும்...

இளம் பிக்கு நீர்த்தேக்கத்தில் மூழ்கி உயிரிழப்பு!

ரஜரட்ட பிக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த ஹீல்ஒய சங்கானந்த என்ற இளம் பிக்கு தப்போவ நீர்த்தேக்கத்தில் மூழ்கி  உயிரிழந்துள்ளார். வனாத்தவில்லுவ ஸ்ரீ தர்மராஜா விகாரைக்கு விஜயம்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாடளாவிய ரீதியில் இன்றும் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம்...

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை பாராட்டிய பௌத்த மதகுருமார்கள்! 

மல்வத்து மகாவிஹார அணுநாயக்க மற்றும் யக்கல விக்கிரமாரச்சி ஆயுர்வேத பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வணக்கத்துக்குரிய நியங்கொட தர்மகீர்த்தி ஸ்ரீ சங்கரக்கித விஜிதஸ்ரீ தேரரின் கௌரவிப்பு மற்றும் சன்னஸ்பத்ர விருது வழங்கும் நிகழ்வு...