25 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

2018ஆம் ஆண்டு அரசியல் சூழ்ச்சியினால்
கூட்டமைப்பினர் ரணிலை பாதுகாத்தார்கள்:கோவிந்தன் கருணாகரம்

கோட்டா கோ கோம் போராட்டத்தினை வழிநடத்துகின்றவர்களோ,புதிய அரசாங்கத்தினை அமைக்கவுள்ளவர்களோ,ஒன்றிணைந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளோ பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கின்றபோதிலும் இந்த நாட்டின் பொருளாதார பின்னடைவுக்கு முக்கிய காரணமாகவுள்ள இனப்பிரச்சினை தொடர்பில் யாரும் சிந்திக்கும் நிலையில் இல்லையென தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.


இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
2018ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அரசியல் சூழ்ச்சியிலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் சட்டத்தரணிகள் இதே ரணிலை பாதுகாத்தார்கள்.மீண்டும் அவ்வாறான நிலைக்கு செல்வார்கள் என்று கருதவில்லை.


தமிழ் தலைமைகள் பல தடவைகள் சூடுகண்டும் மீண்டும்மீண்டும் அடுப்பங்கரைக்கு சென்றுள்ளனர்.மீண்டும் அவர்கள் செல்வார்களானால் இன்று கோட்டா கோ கோம் போராட்டத்தினை முன்னெடுப்பதுபோன்று எங்களுக்கு எதிராக கோ கோம் என்னும் கூச்சலிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்ககூடாது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles