26 C
Colombo
Tuesday, October 3, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

24 மணி நேரத்தில் 338,779 பேருக்கு கொரோனா பாதிப்பு

உலக அளவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் தினசரி எண்ணிக்கை இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சா்வதேச அளவில் 338,779 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

ஐரோப்பிய நாடுகளில் தினசரி நோய்த்தொற்று எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருவது சா்வதே அளவில் அந்த எண்ணிக்கையை அதிகபட்சமாக்கியுள்ளது.

உலக நாடுகளிலேயே இந்தியா, அமெரிக்கா, பிரேஸில் ஆகிய நாடுகளில்தான் மிக அதிக எண்ணிக்கையிலான தினசரி கொரோனா நோய்த்தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னா், இந்த மாதம் 2 ஆம் திகதி தான் உலக அளவில் அதிகபட்ச தினசரி கொரோனா நோய்த்தொற்று பதிவு செய்யப்பட்டது. அந்த நாளில் மட்டும் 330,340 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது என்று உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 3.6 கோடிக்கும் மேற்பட்டவா்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சா்வதேச கரோனா நிலவரத்தைக் கண்காணித்து வரும் ‘வோ்ல்டோமீட்டா்’ இணையதள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 10.6 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

அதிகபட்சமாக ஆசியாவில் 1.15 இலட்சத்துக்கு மேற்பட்டவா்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தப் பிராந்தியத்தில் இதுவரை 2.08 இலட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.

ஆசியாவுக்கு அடுத்தபடியாக, அமெரிக்கா இடம் பெற்றுள்ள வட அமெரிக்க பிராந்தியத்தில் அதிகம் போ் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அந்தப் பகுதியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனா பலி எண்ணிக்கையும் அந்தப் பிராந்தியத்தில் 3.2 இலட்சத்தைக் கடந்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

இப்படியும் நடக்கிறது

சரியோ பிழையோ, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒன்றுதான் தினசரி அரசியலை செய்து கொண்டிருக்கின்றது.தமது சக்தி இவ்வளவுதான் என்பதை அவர்களின் நடவடிக்கைகள் காட்டினாலும்கூட துணிச்சலுடன் போராட்டங்களை அறிவிப்பதும் அன்றாடம் நடக்கும்...

இலங்கை கிரிக்கட் அணியின் புதிய தலைவரானார் குமார் சங்கக்கார!

Marylebone Cricket Club (MCC) புதிய தலைவராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.   முன்னதாக 2021 ஆம் ஆண்டு குமார்...

ஆறு மாத கைக்குழந்தை இறப்பு – தாய் கைது

ஆறுமாத கைக்குழந்தையை அடித்துக் கொன்றதாக கருதப்படும் 21 வயதான தாயொருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஊருபொக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊருபொக்க கட்டுவன பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

இப்படியும் நடக்கிறது

சரியோ பிழையோ, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒன்றுதான் தினசரி அரசியலை செய்து கொண்டிருக்கின்றது.தமது சக்தி இவ்வளவுதான் என்பதை அவர்களின் நடவடிக்கைகள் காட்டினாலும்கூட துணிச்சலுடன் போராட்டங்களை அறிவிப்பதும் அன்றாடம் நடக்கும்...

இலங்கை கிரிக்கட் அணியின் புதிய தலைவரானார் குமார் சங்கக்கார!

Marylebone Cricket Club (MCC) புதிய தலைவராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.   முன்னதாக 2021 ஆம் ஆண்டு குமார்...

ஆறு மாத கைக்குழந்தை இறப்பு – தாய் கைது

ஆறுமாத கைக்குழந்தையை அடித்துக் கொன்றதாக கருதப்படும் 21 வயதான தாயொருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஊருபொக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊருபொக்க கட்டுவன பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே...

மதுபோதையில் முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற சாரதி பொலிஸ் கான்ஸ்டபிள் மீது கத்தியால் தாக்குதல்!

பொலிஸ் கான்ஸ்டபிளை கத்தியால் தாக்கிக் காயப்படுத்திய மதுபோதையில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்ற சாரதியை அலுபோமுல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். மதுபோதையில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்ற  சாரதி...

2023 க.பொ.த உயர்தர பரீட்சை : புதிய திகதி தொடர்பான அறிவிப்பு !

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர  உயர்தரப் பரீட்சைக்கான திகதி அடுத்த சில நாட்களில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றில்...