32 C
Colombo
Friday, April 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் பேரில் 24 மணிநேரத்தில் 200 பேர் கைது

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 200 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளிலேயே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்த 24 மணிநேரக் காலப்பகுதியில் 18 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஒக்ரோபர் 4 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 2,393 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 356 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை அரசாங்கத்தால்; பிறப்பிக்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரை 78 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல்,தேவையற்ற நடமாட்டங்களைத் தவிர்த்தல் என்பன அரசாங்கம் மற்றும் சுகாதாரத் துறையினரின் பிரதான அறிவுறுத்தல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles