அக்மீமன பகுதியில் வெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் மேல்மாகாண தெற்கு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
72 வயதுடைய அந்த நபரிடமிருந்து கைத்துப்பாக்கி, ரிவோல்வர், ரிப்பீட்டர் துப்பாக்கி, எயார் ரைபிள் மற்றும் 49 துப்பாக்கி ரவைகள் என பல்வேறு ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.