8 கிலோ கேரளக் கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது

0
22

திருகோணமலை, அன்புவழிபுரம் பிரதேசத்தை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், 8 கிலோ கிராம் கேரளக் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இரவு இவரைக் கைது செய்தனர்.

கேரளக் கஞ்சா கடத்தப்படுவதாக தங்களுக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று, இந்த நபரை சோதனை செய்த போது, அவரிடமிருந்து 8 கிராம் கேரளக் கஞ்சாவை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.