Home யாழ் செய்திகள் விபத்தில் மாதகல் பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர் உயிரிழப்பு

விபத்தில் மாதகல் பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர் உயிரிழப்பு

0
6

யாழ்ப்பாணம், சங்கானையில் இன்று (06) மாலை இடம்பெற்ற விபத்தில், மாதகல் பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர் கணபதிப்பிள்ளை உலகேந்திரராஜா உயிரிழந்தார். மாதகலிலிருந்து சங்கானை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த அவர், எதிரே வந்த சிறிய ரக லொறி ஒன்றில் மோதியதில் உயிரிழந்தார்.

ஒற்றை வளைவு கோட்டை முறையற்ற முறையில் மீறியதால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து தொடர்பான விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த விபத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.