அம்பாறை அக்கரைப்பற்று திருவள்ளுவர் வித்தியாலயத்தில் கௌரவிப்பு நிகழ்வு

0
22

அம்பாறை திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று திருவள்ளுவர் வித்தியாலயத்தில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 16 மாணவர்களையும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொண்ட மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

‘சிட்டுக்களின் சிறகசைவு சாதனை பெருவிழா’ எனும் தொனிப்பொருளின் கீழ் பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று நிகழ்வு நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் மு.தங்கேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதிக்கல்விப்பணிப்பாளரும் ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப்பணிப்பாளருமான க.கமலமோகனதாசன்
மற்றும் பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.அம்ஜத்கான் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.

புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 16 மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொண்ட மாணவர்களும் அதிதிகளால் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 13 வருடங்களாக பாடசாலையினை சிறப்பாக முன்னெடுத்து ஓய்வு பெறவுள்ள அதிபர் மு.தங்கேஸ்வரனின் சேவையினை பாராட்டி பாடசாலை கல்வி சமூகமும் பெற்றோர்களும்
இணைந்து அவரைக் கௌரவித்தனர்.

வலயக்கல்வி அலுவலகத்தின் பாடசாலைகளின் இணைப்பாளர் எம்.யோகராஜா, அக்கரைப்பற்று இராமகிருஸ்ண மிசன் மகாவித்தியாலய அதிபர் ரவிலேகா உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.