ஆலையடிவேம்பில் 5000 ரூபாய் கொடுப்பனவு

0
260

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபாய் கொடுப்பனவு இன்று வழங்கப்பட்டது.

பிரதேச செயலாளர் வி.பபாகரனின் கண்காணிப்பின் கீழ் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரனின் வழிகாட்டலில் சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கொடுப்பனவுகளுக்காக ஆலையடிவேம்பு பிரதேசசெயலாளர் பிரிவில் 6880 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் 3 கோடியே 44 இலட்சம் ரூபாய் அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு துக்கீடு செய்யப்பட்ட பணத்தொகை ஆலையடிவேம்பு தெற்கு மற்றும் வடக்கு வங்கிகளின் மூலமும் நடமாடும் வங்கிச்சேவை மூலமும் மக்களின் வீடுகளுக்கு சென்று வழங்கிவைக்கப்படுகிறது.

இக்கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் ஆலையடிவேம்பு தெற்கு வங்கி முகாமையாளர் கே.அசோக்குமார், திட்டமுகாமையாளர் என்.சுரேஸ்காந், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சமுர்த்தி கொடுப்பனவு பெறுபவர்கள், தொழில் பாதிப்புற்றோர், சிரேஸ்ட பிரஜைகள், நோய்பாதிப்புக்குள்ளானவர்கள் உள்ளிட்ட பாதிப்புற்ற குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.