2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் மோதின.
கண்டி – பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் நேற்றைய போட்டியில் இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்றது.
இதற்கமைய அந்த அணி முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்துள்ளது.
அதன்படி, முதலில் துடுப்பாடிய நேபாளம் அணி 48.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 230 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில், அதிகபடியாக ஆசிப் ஷேக் 58 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் இந்திய அணியின் ரவிந்திர ஜடேஜா 40 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்தநிலையில், 231 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட இந்திய அணி ஆரம்பித்தது.
இந்திய அணி 17 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளையில் மழை குறுக்கிட்டதால், போட்டி இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில், பின்னர் டக்வத் லூயிஸ் முறைமைக்கு அமைய போட்டி 23 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.
இதன்படி, இந்திய அணிக்கு 145 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்திய அணி 20.1 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.
அணிசார்பில், அதிகபடியாக ரோஹித் சர்மா 74 ஓட்டங்களையும், சுப்மன் கில் 67 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.