இலங்கைக்கு சர்வதேச மன்னிப்புச் சபை விடுத்த கோரிக்கை

0
110

இலங்கையில் அமைதிவழியில் நடத்தப்படும் போராட்டங்களை நசுக்குவதை, இலங்கை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
2022 மார்ச் முதல் 2023 ஜூன் வரை இலங்கையில் நடைபெற்ற 30 போராட்டங்களில், போராட்டக்காரர்களுக்கு எதிராக படைத் தரப்பினர் அதிக பலத்தை பிரயோகித்தனர் என சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை மேற்கொள்ளத் தவறியுள்ளது.
சட்டவிரோத – பலவந்த பிரயோகத்துக்குக் காரணமான அதிகாரிகளை நேரடி விசாரணைக்கு உட்படுத்தி சட்டத்தின் முன் நிறுத்தும் வரை இலங்கை அரசாங்கத்துடனான ஒத்துழைப்பை அவசரமாக மீளாய்வு செய்யுமாறு சர்வதேச மன்னிப்பு சபை, சர்வதேச சமூகத்திடமும் கோரியுள்ளது.