சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான தமது நிலைப்பாடு வெள்ளிக்கிழமைக்கு முன்பு அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மலையாளபுரம் கிராம மக்களுடனான கலந்துரையாடல் ஒன்று மலையாளபுரம் கிராம அபிவிருத்திச் சங்க வளாகத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.