இலங்கையில் ஈரான் – இஸ்ரேல் மோதல் ஏற்படுத்தும் தாக்கம்- சஜித் கோரிக்கை

0
24

இஸ்ரேல்-ஈரான் மோதல் இலங்கையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விவாதிக்க பாராளுமன்ற விவாதம் நடத்த நேரம் ஒதுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (18) சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 20 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் விவாதம் நடத்தக் கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இஸ்ரேலில் 10,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தற்போது வேலை செய்கிறார்கள் அதேபோல ஈரானுக்கு இலங்கை அதிக அளவு தேயிலை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இஸ்ரேல் – ஈரான் மோதல் காரணமாக, மசகு எண்ணெயின் விலையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, இந்த மோதல் குறித்து விவாதிக்க இன்று அல்லது நாளை விவாதம் நடத்த அழைப்பு விடுத்தார்.

அதன்படி, சபாநாயகருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விவாதத்தை தொடர்ந்து, இன்று பிற்பகல் 3:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.