28 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 11,744 ஆக உயர்வு

நாட்டில் மேலும் 409 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திவுலபிட்டிய – பேலியகொட கொரோனா கொத்தணியில் மேலும் 409 நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட 401 பேர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங் களில் 08 பேர் ஆகியோர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, திவுலபிட்டிய – பேலியகொட கொரோனா கொத்தணியில் கொரோனா தொற்றார்களின் மொத்த எண்ணிக்கை 8ஆயிரத்து 266 ஆக உயர்ந்துள்ளது.

இலங்கையில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 11ஆயிரத்து 744 ஆக உயர்வடைந் துள்ளது.

தற்போது, 6ஆயிரத்து 140 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா தொற்றுக்கு சிகிச்சை யளிக்கும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.

அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிக் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5ஆயிரத்து 581ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 430 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்று காரணமாக இதுவரை 23 பேர் உயிரிழந் துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles