நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 10 ஆயிரம் பேர் எலிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் எலிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், அதிகளவில் வெள்ளம் சூழ்ந்துள்ள இரத்தினபுரி, காலி, களுத்துறை, குருநாகல் மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எலிக்காய்ச்சல் நோயால் வருடத்துக்கு 120 முதல் 200 பேர் உயிரிழக்கின்றனர்.
கண் சிவத்தல், காய்ச்சல், எரிச்சல், காயங்களில் வீக்கம் ஏற்படல் மற்றும் கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல் என்பன எலிக் காய்ச்சல் நோய் அறிகுறிகளாகும்.
எனவே, இந்த நோய் அறிகுறிகள் காணப்படுபவர்கள் உடனடியாக மருத்துவரை நாடுவது அவசியம் என்றும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.