உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் அதிருப்தி

0
208

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் குறித்த யோசனைகளை ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் தம்மிடம் கையளித்திருப்பதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அத்திருத்த யோசனைகளில் மரணதண்டனை வழங்கலை நீக்கவேண்டும் என்ற விடயம் உள்ளடக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் கடும் அதிருப்தியடைந்திருப்பதாகவும், இதுகுறித்து எதிர்வரும் மே மாதம் இரண்டாம் வாரத்தில் நாடாளுமன்றில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.